April 29, 2009

கூற்றத்தை கையால் விளித்தற்றால்



திறமையானவர்களை திறமை இல்லாதவர்கள் எதிர் கொள்ள முற்படுவத்து எமனை தானே சென்று கூப்பிடுவது போன்ற செயலாகும்.

இதை வள்ளுவன் அழகாக சொல்கிறார்

கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவாருக்கு

ஆற்றாதார் இன்னா செயல்(894)

ஈழப்பிரச்சனை கடந்த 30 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு அரசும் வரும் போகும் ஆரம்ப காலத்தில் ஈழத்து பிரச்சனைக்கு தெற்கிலும் டில்லியிலும் சில அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்தனர். அதன் பிறகு கூட்டனி என்ற ஸ்திரமற்ற ஆட்சி முறை மத்தியில் வர துவங்கியது. இதனை அடுத்து வெளிநாட்டு கொள்கையில் சிக்கலான பல முடிவுகளை கூட்டனி கட்சிகளின் வற்புறுத்தலாம் எடுக்க வேண்டி இருந்தது.

சில கட்சிகள் தங்களில் வசதி வாய்ப்பிற்கேற்ப அரசாங்கத்தை பயன்படுத்தி கொண்டனர். இந்த நிலையில் ஒரு அரசியல் தலைவர் சிலரது சூழ்ச்சியினால் கொல்ல படுகிறார். இதை ஒரு ஈழவிடுதலைக்காக போராடுபவர்கள் மீது சுமத்தி விட்டு இந்தியாவில் இருந்து அந்த இயக்கத்திற்கு நிறந்தரமாக வாசலை மூடினார்கள். இந்த நிலையில் செத்து போன அரசியல் தலைவரின் கட்சி வந்து சென்றாலும் அதற்கு தெற்கிலும் வலுவான கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை.

இதே நேரத்தில் சிங்கள அரசிற்கு போராளிகளை எதிர்க்கும் திறமை சுத்தமாக இல்லாமல் இருந்தது. போதிய படைபலம் உலக நாடுகள் உதவி என இருந்தாலும் போராளிகளுடன் போராடும் திறமை அவர்களிடம் இல்லாமல் இருந்தது. சரியாக திட்டமிடப்படாமை, தனது நாட்டு பகுதியின் பூகோள அறிவு குறைவாக இருந்தது போன்றவை சிங்கள ராணுவத்தின் நிறந்தர குறைபாடுகள்.

இந்த நிலையில் இந்திய அரசில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைக்கிறது. அதற்கு உறுதுனையாக தமிழக கட்சிகள், உறுதுணையாக இருக்கும் இரண்டு கட்சிகளுமே பணத்திற்கு விலைபோகும் கட்சிகள். அந்த கட்சி தலைமைக்கு அந்த தலைமையின் குடும்பத்திற்கும் சிறப்பு கவனிப்புகள் கவனிக்க பட்டது. அதன் பலனான திறமை அற்ற சிங்களவனுக்கு நேரிடையாக உதவ போராளிகளை அடக்க களம் இறங்கியது இந்தியா.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது இந்திய அரசின் திறமையை இரவல் தான் வாங்கியது. இந்தியாவில் நாளை ஆட்சி மாற்றம் வந்த பிறகு இந்த இரவல் திரும்ப பெறப்படும். சில நேரங்களின் கட்சிகளின் அழுத்தால் உலக நாடுகளின் கண்டிப்பால் சிங்கள அரசை இந்தியா நட்டாற்றில் விட்டு விடும். அப்போது சிங்களம் என்ன செய்யும்.

போராளிகளை நாம் குறைவாக எப்போதுமே மதிப்பிட முடியாது. சில நூறு போராளிகள் கூட பெரும்படையை அடித்து விரட்டும் திறன் படைத்தவர்கள். இதை சிங்களவனே மறுக்கமாட்டான். இந்த நிலையில் இந்தியாவில் பெருத்த அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே முடித்து விடுவோம் என்று தோள்தட்டி இறங்கியவர்கள்.

முடிவில்லாமல் நட்டாற்றில் நிற்கின்றனர். உலக நாடுகளின் அழுத்தம் இன்ன பிற காரணங்கள் சிங்கள அரசின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டது. அமேரிக்காவின் வற்புறுத்தலாலும் கண்டிப்பாலும் இந்தியா தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு சிங்களம் வரதுவங்கிவிட்டது. திறமையுள்ள போராளிகளை தவறாக மதித்த காரணத்தால், சிங்கள அரசின் எதிர்காலம் தற்போதுகேள்விக்குறியாகிவிட்டது.

இதைத்தான் வள்ளுவன் கூற்றத்தை கையால் விளித்தற்றால் என்று கூறுகிறார்

முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே

முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே


முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாத அரசுகள் முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.


முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்(640)


குடிமக்களை கவனத்தில் கொள்ளாதது
சிங்கள தேசத்தின் ஆரம்பகால அரசியல் வளர்ச்சியை கூர்ந்து நோக்கினால் ஒன்று புலப்படும் அதாவது வள்ளுவனின் குரள் போல சரியான திறமை இல்லாத அரசுகளும் ஆமாம் சாமி போடும் அமைச்சுகளும் சிங்களத்தில் இருந்தது தெரியவரும். ஆரம்ப காலங்களில் புவியின் நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்வு வளம் கருத்தில் கொள்ளாமல் சட்டமியற்றிய் போதே இதற்கு முடிவு .
இந்திய அரசியலமைப்பு
இதே நேரத்தில் இந்தியாவை எடுத்துகொண்டால் கொண்டால் காலங்காலமாக தீண்டாமை கொடுமையில் உழன்று வந்த ஒரு இனத்தின் தலைவர் தனது இனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மேலும் நாட்டில் உள்ள உயர்குடிக்கும் இடையூறின்றி அனைத்து மக்களின் எதிர்காலம், வாழ்வு முறை, கல்வி, பெருளாதார மேம்பாடு, சட்ட பரவல் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியான சட்ட மியற்றினார். இதன் காரணமாகத்தான் இன்று பல காலாச்சாரம், மொழி மற்றும் பல விடயங்களில் வேறுபட்டு இருந்தாலும் அனைவரின் உள்ளத்திலும் இந்தியா எனது நாடு இந்த நாட்டில் எங்கு சென்றாலும் எனக்கு வாழ உரிமை உண்டு என்று ஒரு எண்ணம் பிறப்பிலேயே தோன்றிவிடுகிறது.

இதன் காரணமாகத்தான் உத்திரபிரதேச காரன் தீடிரென பெட்டி படுக்கை தூக்கி கொண்டு மும்பாய்க்கு கிளம்பி விடுகிறான்.

மார்வாடி சட்டென்று கடைபோட்டு வட்டிக்கு விட காந்திநகரில் இருந்து காரைக்குடிக்கு வந்துவிடுகிறான். திருநெல்வேலிகாரணும் இட்லி சட்டியை தூக்கிகொண்டு கோலிவாடாக்களுக்கு வந்து விடுகிறார்கள். காரணம் இந்த நாட்டின் சட்டத்தில் ஒரு நம்பிக்கை, பாதுக்காப்பில் உறுதி.
தேவைகளை கணக்கில் கொள்ளாமல்
ஆனால் சிங்களம் அப்படியா சட்டங்களை இயற்றும் போதே கொடுபிடி என்று ஒரு நாடு தனது நாட்டின் குடிமக்களில் ஒரு பாலரை சிறுபாண்மையினர் என்று சொல்லிகொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டதோ அந்த நாட்டில் வளர்ச்சி என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகி போய்விடும். காரணம் தகுந்த அமைச்சுகளும் அரசுகளும் சிங்கள நாட்டிற்கு கிடைக்கவில்லை.
இடியாப்ப சட்டவடிவம்
ஆரம்பகாலதிலும் சரி இன்றும் சரி, ஆரம்ப காலங்களில் சீன நாட்டின் குழப்படியான கம்யூனிச கொள்கையையும் மேற்கத்திய முதலாளித்ததுவத்தையும் கலந்து கலப்படமான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இது ஆங்கிலேயன் விட்டு சென்ற சட்டத்தையும் சேர்த்து கொண்டு இடியாப்ப சிக்கலான சட்ட முறைமையை கொண்டு வந்தால், குழப்பம் ஏற்பட்டு சில வருடங்களிலேயே புதிய சட்டமொன்றை இயற்றவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
பூர்வீக குடிகளை புறக்கணித்தல்
அப்போதாவது தனது நாட்டில் பூர்வீக குடிகளாக வாழும் தமிழர்களை கூட இணைத்து கொண்டு அவர்களிடமும் யோசனைகள் கலந்தாலோசித்து சட்டமியற்றி இருந்தால் இந்நேரம் சிங்கள தேசம் உலக வரைபடங்களில் முக்கியமான வளம்பெற்ற நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஆனால் துணை
சரியில்லாமல், கண்டவன் சொல் கேட்டு தமிழரை புறக்கணித்து சட்டமியற்றியது. சட்டம் இயற்றும் போதாவது இது தவறு இது சரி என்று சொல்ல தகுந்த அமைச்சர்கள் யாராவது இருந்தார்களா, அதுவும் கிடையாது.
சுயநலம் தேடும் அரசியலார்
ஏன் என்றால் தனி மனித சுயநலம், அரசியல் செய்து பிழைக்க வந்த சோம்பேரிகள் தனக்கும் தன் பரம்பரைக்கும் சொகுசாக வாழ என்னை வழி அதை மட்டும் கருத்தில் கொண்டு அதை சட்டமாக மாற்றிவிட்டது. ஏன் என்றால் ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் அந்த நாட்டின் அரசை நிர்ணயிப்பவர்கள்.
அரசியல் ஞாணசூனியம்
ஆனால் துரத்திஸ்டவசமாக தெற்காசியாவில் ஆங்கிலேயன் விட்டு செல்லும் போது மக்கள் அரசியலில் அவ்வளவாக ஞானம் பெற்றவர்கள் இல்லை. இந்த குறைபாட்டை அரசியாலார்கள் தங்களுக்கு வசமாக மாற்றி கொண்டார்கள். இந்த காரணத்தால் தான் இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி, மற்றும் வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் வாதிகள் தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் மக்களை மாற்றி அரசியல் ஞானம் கடைகோடி வரை செல்லாமல் பார்த்து கொண்டார்கள். இந்தியாவில் அரசியல் ஞானமில்லாமல் செய்வதற்கு இங்குள்ள சாதி மத வேறுபாடுகளை கையில் எடுத்து பிரிவினர்களுக்கிடையே அவ்வப்போழுது சண்டையை மூட்டி விட்டு தங்களின் அரசியல் கடையை சீராக நாடத்தி வந்தார்கள்.
ஆமாம் சாமி
ஆனால் சிங்களவனுக்கு இவ்வளவு சிரமபட தேவையில்லை , ஏற்கனவே தனக்கும் எந்த கருத்திலும் ஒன்று படாத தமிழர்கள், அரசியல் வாதிகள் என்ன செய்தால் நமக்கு என்ன நமக்கு மேலே நம்மாள் இருந்தால் போது என்று கண்மூடி கிடைக்கும் சிங்கள குடிமக்கள். இந்த விளைவுகள் தான் இன்று சிங்கள தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுகொள்வார்கள், மக்களின் ஆதரவு என்ற ஒன்று இருந்தால் போதும் என்ற நிலையில் கொடுங்கோலாட்சி புரிந்து வருகின்றனர். அங்குள்ள இவர்களின் செயலுக்கு ஆமாம் சாமி போட்டு வருகின்றனர்.
--

அரம்பொருத பொன்போலத் தேயும்


அரம்பொருத பொன்போலத் தேயும்


முன்னோடியாக வளமுள்ள நாடு என்றாலும் உட்பகையுள்ள குடியானது,அறத்தினால் அறவாப்பட்ட உலோக்த்தைபோல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

"அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை யுற்ற குடி"(888)

நாட்டின் உள்நாட்டில் நடக்கும் நிகழ்சிகளை பற்றி இவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

சிங்கள தேசம் நமது குழுமத்தில் சில நன்பர்கள் சிங்கள தேசத்தில் உள்ள அழகான மலை, வனம், நதி,பூக்கள் படங்கள் அனுப்புவார்கள். அந்த நாட்டின் அழகு உண்மையில் அற்புதமானவை, சில வருடங்களுக்கு கண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை பற்றி டாக்குமெண்டரி படம் ஒன்று பார்க்க நேர்ந்தது மனம் சில நேரங்களில் இந்த பகுதிகளில் ஏன் பிறக்கவில்லை என்று கூட நினைத்தது. அவ்வளவு அழகு அதுமட்டுமா மத்திய ஆசியாவின் சிங்கபூர் என்று கூட அது அழைக்கபட்டது.

அந்த நாட்டின் அரசு (ஆங்கிலத்தில் ஓவர் காண்பிடன்ஸ்) என்று சொல்லுவார்கள், திமிர்த்தனம் ஆம் அதுதான் அந்த நாட்டை ஆண்டவர்களிடம் மிஞ்சி இருந்தது. ஆரிய இனம் இந்தியாவில் எப்படி திராவிட இனத்தை அடக்கி ஆழ்கிறதோ அதை அங்கே நடத்த பார்த்தது. இந்தியாவில் பல பெரிய தலைவர்கள் தோன்றி திராவிட இனவிழிப்புணர்வு ஆரிய மாயைகளை எடுத்து சொன்னதும் அரசியலிலும் பங்கு பெற்று ஆட்சியாளார்களாக மாறிவிட்டதாலும், தங்களின் திராவிட அடக்கு முறை கொள்கைகளை முழுமையாக செய்ய முடியாமல் புளுங்கி கொண்டு இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் சிங்களன் ஆரம்பத்தில் இருந்தே திராவிட வளர்ச்சியை அடக்க முனைந்திருந்தான். இதன் காரணம் தான் சுதந்திரம் வாங்கியதும்

முடிந்தவரை தமிழர்களின் அதிகாரத்தை பறித்தான்.

என்று தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று சட்டம் இயற்றபட்டதோ அன்றே அந்த சிங்கள தேசத்தின் இறையான்மைக்கு சவப்பெட்டி தயாராகிவிட்டது. மெல்ல மெல்ல தனது கொடுமையை அரங்கேற்ற துவங்கி விட்டனர். விளைவு தமிழனம் சொல்லன்னா துயரை அடைய நேர்ந்தது. தனது மண்ணை விட்டு தனக்கு ஒவ்வாத சூழ்நிலை, காலநிலை போன்றவை நிறைந்த நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக பயணிக்க துவங்கிவிட்டது. இது சிங்களவனுக்கு மேலும் தொக்காகி போய் விட்டது. இதனால் முடிந்தவரை தமிழர்களை விரட்டுவதை முனைப்பாக செய்து வந்தான். இந்த நிலையில் இந்தியாவிலும் வாம்மா போம்மா வேலைகள் நடக்க ஆரம்பித்தது. அமைதிபடை என்ற பெயரில் இந்தியாவில் இருந்து சென்றும் சிங்களவனுடன் சேர்ந்து அவனுக்கு வேலையை எளித்தக்கி கொண்டனர்.

வெளியே இந்த வேலையேல்லாம் நடந்து கொண்டு இருந்தது. சுரண்டும் நாடுகள் இன்றோ நேற்றோ சிங்களம் படுத்துவிடும் ஏறிமேய வேண்டியது தான் என்ற நினைப்பில் கோடி கொடுத்து கொள்ளையடிக்க சீட்டு பிடித்ததார்கள். வள்ளுவன் சொன்னது போல் வெளியே அழகான சிங்கள தேசம் உள்ளே தேய ஆரம்பித்தது. ஒவ்வொரு வளர்ச்சியிலும் மிகுந்த சிரமப்பட வேண்டி இருந்தது. இடையில் பாதுகாப்பு செலவீனங்கள், செல்லரித்து போட வீட்டின் சட்டத்திற்கு சிங்கள மக்களை கலரடித்து பார்த்தார்கள் அரசியலார்கள் அதையும் நம்பினார்கள்.

எத்தனை நாள் தான் செலரித்த சட்டத்தில் கலர் அடிக்கமுடியும்,

தமிழர்கள் மீது வளர்த்த உட்பகையால் அந்த நாட்டின் வளர்ச்சி இன்று மரித்து கொண்டு இருக்கிறது. அதிக நாள் அல்ல இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அந்த நாட்டிற்கு கடன் வழங்கிய நாடுகளுக்கு மறைமுக அடிமையாக வேண்டிஇருக்கும், அப்போது தங்களது நாட்டின் தூதரகங்களுக்கு கூட வாடகை கொடுக்கமுடியாமல் கேவலபட வேண்டி இருக்கும்.

அன்று ஆட்சியாளர்கள் சொன்னதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்ட மக்களுக்கு தெரியவரும் அதைவிட உலகம் முழுவதும் உள்ள தமிழினம் சிங்களத்திற்கு எதிராக மாறிவிட்டது. இன்று இணைய தளங்களில் எழுத்துசண்டை வந்து விட்டது. இது நாளை தெருவிற்கு வரும் வேற்று நாடுகளில் வசித்தாலும் சிங்களவன் தனக்கு பகைவன், தமிழன் தனக்கு பகை என்று சண்டைக்கு நிற்பார்கள். இதுவே அதிக இப்படி அனைத்து வழிகளிலும் சிங்களம் சிறுக சிறுக தேய்ந்து வருகிறது.

வள்ளுவன் வாக்கு பொய்த்தாக வரலாறு இல்லை

காக்கை கரவா கரந்துண்ணும்



வள்ளுவன் குறளில் பல விலங்குகளை உதாரணம் சொல்லி இருக்கிறான், களிரு, தாமரை, அண்ணம், காவரிமான் இன்ன பிற ஆனால் காக்கையை மட்டும் அபூர்வமாக சொல்லி இருக்கிறார்.

காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே யுள (527)

உணவை கண்ட உடன் தனது சுற்றத்தாரையும் அழைத்து கொண்டு வந்து உண்ணும் குணமுடையது காக்கை. ஏன் காக்கை உணவை கண்டது தனது உறவை அழைக்கிறது வைப்பது சிறுகரண்டி சோறு அதிலும் அரைமணி நேரம், கா கா என்று காலங்காந்த்தால கூப்பிட்டு துக்கத்தை கெடுக்கிறார்கள். காக்கை சோற்றை எண்ணிப்பார்த்தால் அதிகம் அதிகம் 200 பருக்கைதான் இருக்கும்.

சிறிது நேரத்தில் நமது வீட்டிலும் சோறுவைத்தவன் வீட்டிலும் சுமார் 20 காக்கைக்கு மேல்வந்து விடும். 200 பருக்கை இருக்கும் சிற்றிலை சோற்றை நான் மட்டும் தின்றுவிட்டு கிளம்பிவிடுவோம் என்ற சுய நல மணப்பாண்மை இல்லாமல் எனது உறவுகள், எனக்கு கிடைக்கும் இந்த சிறுபருக்கையிலும் அந்த உறவுகளுக்கு கொடுத்து உண்பேன் என்று கூறி அழைக்கிறதே அந்த உண்னத குணத்துடன் பிறந்த காகம் . இந்த காகத்தின் பெயரை அடிக்கடி உபயோகித்து அதன் மாட்சிமையை கொடுத்து கொள்ளக்கூடாது என்ற உண்ணத நோக்கில் தான் இப்படி சொல்கிறான்.

இன்று நம் தமிழினத்தில் நடப்பது என்ன! ஒரு புறம் சாகிறர்கள், ஒரு புறம் உண்ணாவிரதம், ஒரு புறம் போராட்டம், பல தீக்குளிப்பு , உலக நாடுகள் கண்டிக்கிறது ஆனால் இங்கோ கதை எழுதுகிறார்கள். கவிதை சொல்லுகிறார்கள், தகவல் அனுப்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய என்று கூட கேட்கிறார்கள் . நான் என்ன செய்ய வென்று மூளை சும்மா இருந்தா இன்னேரம் எல்லோரும் கோமாவில் இருப்போம். ஏன் இந்த கண்ணோட்டம் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு வேலை நடந்தாகவேண்டும், வயிறு நிறம்பியாக வேண்டும்.

யார் சாகிறர்கள், கரையானா, எறும்பா, இல்லை புழு பூச்சிகளா, ஒரு எறும்பு செத்தால் ஓராயிரம் எறும்புகள் ஒன்று கூடி தூக்கிசெல்லுமே கவனித்தீர்களா என் உறவுகளே, கரையாண் புற்றை இடித்து பாருங்கள் மறுநாள் உறுதியுடன் மீண்டும் அந்த புற்றை கட்டி தீர்க்கும் அதற்கு மூளை எத்தனை மில்லி கிராம், மைக்ரோ கிராம் கூட கிடையாது. ஆனால் மனிதன் தலை என்னும் உறுப்பில் 90 சதவிதம் மூளை கொண்டவன்.

உலகிலேயே அற்புத பிறவி, அந்த பிறவிகளிலேயே மிகவும் புத்திகூர்மையுள்ளவன் தான் தமிழன். ஒத்து கொள்ள மாட்டான் இந்த கூற்றை! யார்? மராட்டியன் அல்ல, சிங் அல்ல, பாலாஸ்தீனியன் அல்ல , ஏன் சிங்களவனும் அல்ல . தமிழனே ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன் என்றால் எங்கே நான் புத்திசாலி என்று தெரிந்தால் தன்னிடமும் உதவி கேட்டுவந்து நிற்பானோ என்ற பயம், காழ்ப்புணர்ச்சி, சுயநலம். அதிக நாட்கள் பின் செல்ல வேண்டாம்,

கடந்த வருடம் காஸாவில் இஸ்ரேல் குண்டு போட்டான். நானும் பல இஸ்லாமிய குழுமங்களில் உறுப்பினராக இருக்கிறேன். அது இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரியும் , அந்த போர்கால கட்டத்தில் ஈகைக்குறிக்கும் வசனம் இருந்தது எப்படி அங்கு சாகிறார்கள் அவர்களுக்கு உதவுங்கள் என்று சொல்லி இருந்தது. கவிதை இருந்தது இஸ்ரேல் செய்யும் தீங்குதனைஉலகிற்கு எடுத்து

சொல்லும் கண்டிப்புமிருந்தது. தகவல் இருந்தது இஸ்ரேல் எப்படி பாலாஸ்தீனியர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிடிங்கினான் என்று தகவல் இருந்து, இப்படி அந்த போர் முடியும் வரை தமிழ், அரபி, ஆங்கிலம், உருது, போன்ற யாகூ, மற்றும் கூகிழ் குழுமங்களிலும், வேர்டு பிரஸ், பிளாக்ஸ் போன்ற வலைப்பூக்களிலும் போரை பற்றி இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. எங்கே எந்த இஸ்லாமிய சகோதராவது இதை மறுக்கட்டும். ஏன் !! வலி எங்கோ மனிதம் துடிக்கிறது இங்கே தூக்கம் கேட்டு தவிக்கிறான். வேதனை உள்ளத்தில் கிடந்த வேதனை தான் எழுத்தில் வந்து விழுகிறது

.

எங்கே வேதனை பல்லாயிரம் கிலோ மீட்டர் தாண்டி இந்து, அரபி போன்ற இரு பெரும் சமுத்திரம் தாண்டி இருக்கும் ஒருநாட்டில் சாகிறார்கள் இங்குள்ளவர்கள் வேதனை படுகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காக மட்டும் அல்ல இந்தியாவும் கண்டனம் தெரிவித்து. ஆனால் இங்கே உனது உறவுகள், இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்த உனது பூட்டன் பூட்டியின் வாரிசுகள், உனது வீட்டின் அருகில் சாகிறது, வலியில் ஆழுகிறது, பசியில் துடிக்கிறது.

உனக்கு வடமொழியில் தமிழின் கலப்பு(இலக்கண ஆராய்ச்சியாம்), தமிழின் தொன்மை, சுற்றூலா போவோமே, வாடிப்போன வசந்த காலம் கவிதையாம், நமது இனத்தின் எதிர்காலமே எரிந்து போய் கிடக்கிறது, பக்கத்து வீட்டில் தீப்பற்றினால் அந்த தீ உனது வீட்டில் பிடிக்க கன நேரமாகாது நாம் நம் தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறோம்.

நாளை வரலாற்றை படிப்பார்கள் தமிழில் தான் படிப்பார்கள்,( தமிழ் சாமானியத்தில் சாகாது தமிழன் சாவான், கொல்லுவார்கள் அவனைத்தானே கொல்கிறார்கள் என்று சமாளித்து கொண்டு தமிழ் கவிதை புனைவான், கட்டுரை எழுதுவான்) இதே தமிழில் உங்களது குழந்தைகளில் குழந்தைகள் படிக்கும் 2009-ல் ஆயிரக்கணக்கில் தமிழர்களை குண்டு போட்டு சிங்கள ராணுவம் கொண்றது என்று அப்போது கேட்பான் உங்கள் பேரன் தாத்தா நீங்கள் எல்லாம் என்ன மாங்கா பறித்து கொண்டு இருந்தீரோ இப்படி சாகடித்து கொண்டு இருக்கும் போது என்று கேட்பான் காலம் வரும் நிச்சயம் கேட்பான் ! ! எங்கு வந்து கேட்பன் தெரியுமா முதியோர் இல்லத்தில் பணம் கட்டினால் சேவை அது கொஞ்சம் லேட்டாக வந்தா யோவ் பெரிசு என்று அதட்டும் காப்பகத்தார் உண்ணை திட்டும் நேரத்தில்

உங்கள் மனம் என் பேரப்பிள்ளைகள் என்னை பார்க்க எப்போது வருவார்கள், எனது மகன் எப்போது இந்த மாத பீஸை கட்டுவான் என்று ஏக்கத்தில் இருக்கும் போது மாத முதல் நாளில் பீஸ் கட்ட வந்த மகனுடம் ஒட்டி கொண்டு வரும் பேரன் கேட்பான்.

என்ன சொல்வீங்கா இல்ல அப்ப நாங்க எழுதி கொண்டு இருந்தோம்,கவிதை எழுதிகொண்டு இருந்தோம் கட்டுரை வரைந்து கொண்டு இருந்தோம், தகவல் வழங்கி கொண்டு இருந்தோம்,கேட்டு

கொள்வான். வீட்டிற்கு செல்வான் மறுமாதம் தனது தந்தை டேய் வாடா தாத்தாவை பார்க்கனும் கொஞ்சநாள் கொட்ட வேண்டி இருக்கு என்று சொல்லும் போது பையன் சொல்லுவான் எந்த தாத்தா எந்த பாட்டி தமிழரை கொத்து கொத்தாக கொல்லும் போது கவிதை புனைந்தாரே அந்த தாத்தாவா அவருக்கு ஏனப்பா!! பல ஆயிரம் பேர் சாவும் போது கவலையில்லாத மனிதருக்கு சேவை செய்து பயன் என்ன எனக்கு மூனில் அஸ்ற்றோ சயின்ஸ்ஸில் இடம் கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் தாத்தாவிற்கு கொடுத்து வீணடிக்க வேண்டாம் என்று சொல்லுவான்,

வரும் நமக்கு இது கண்டிப்பாக வரும். ஒரு எறும்பு தனது உறவு இறந்த உடன் பல தூக்கி கொண்டு மவுன ஊர்வலம் செல்கிறது, ஒரு கரையான் வீடு இடிந்தவுடன் லட்சக்கணக்கான உறவுகள் இனைந்து வீட்டை கட்டுகிறது. நாமோ சாகாட்டும் தூக்கி போடுங்கப்பா, காயமடையட்டும் மருந்து போடுங்கப்பா, பட்டினியால் சாகின்றனர் சோறு போடுங்கப்பா , இப்படி எழுதினால் அவர்களுக்கு பயனுண்டாப்பா என்று கட்டளை இடும் .சொந்தங்களே

மரணித்த உடல்களை அடக்கம் செய்கிறோம், காயமுற்று கிடக்கும் எனது உறவுகளின் காயங்களை மருந்திட்டு ஆற்றுகிறோம், பசியால் வாடும் எனது சொந்தங்களுக்கு உணவு ஊட்டுகிறோம் என்று என்றாவது சொன்னதுண்டா? அதற்கு முயற்சியாவது எடுத்துண்டா, இப்படி யெல்லாம் நடக்கும் என்று சொல்லித்தான் வள்ளுவன் நினைக்கிறான் இவனுக்கு கற்பனை கதைகளை எழுதி வைத்தால் எப்படி நடக்கும் என்று யோசித்து யோசித்தே சொத்து போவான்,

அதனால் அவன் வீட்டில் அருகில் தினமும் வந்து போகும் காகத்தை உதாரணமாக வைத்து சொல்கிறான். அதும் அடிக்கடி சொன்னால் சலித்து போவான் என்று ஒரே ஒரு முறை சொல்கிறான். அவன் ஒரு முறை சொன்னாலும் ஒராயிரம் முறை சொன்னதற்கு சமம். இனிமேல் கவிதை எழுதுங்கள் கட்டுரை எழுதுங்கள் தகவல் சொல்லுங்கள் நமது தலைமுறையாவது ஒற்றுமையாய் வாழட்டும் இருக்கும் வரை நாமும் நமது சொந்தங்களுக்காக வாழ்வோம்.

காக்களைப்பொல் ஒரு பருக்கை கிடைத்தாலும் அதை பங்கிட்டு வாழ்வோம்

சூரியன் இன்று மறையலாம் ஆனால் நாளை மீண்டும் புதிய உற்சாகத்துடன் உதிக்கும், இது இயற்கை தத்துவம், தமிழினமும் அது போல் தான் இன்று பின்னடைவுதான் ஆனால் நாளை புதிய எழுச்சி உண்டு

April 26, 2009

தமிழர்களின் நன்றிகள் என்றென்றும்







மும்பை,சித்திரை.13

மனசாட்சியற்ற மகிந்தா ராஜபக்சே அவர்களுக்கும், தன் கணவர் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் கல் மண் என்று நினைக்கும் மங்கையர்கரசி சோனியா ஜி அவர்களுக்கு, என்னமும் நடக்கட்டும் பணம் வரும் வழிமுக்கியம் என்று ஓட்டைவாளியில் பொருளாதார கிணற்றீல் இருந்து பணத்தண்ணீர் இறைக்கும் டர்பன் மாமா மான்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், ஆட்சி கட்டிலில் கடைசி பிராணவாயுவை சுவாசிக்கும் பிரணாப் முகர்சிக்கும் உலக தமிழர்களின் அதீத‌ நன்றிகள்,

ஆம் கடந்த 30 வருடங்களாய் நாங்கள் அதோ புலிகள் வென்றாகள், சிங்களனை அடித்தார்கள், இதோ புடித்தார்கள், என்று சந்தோசபட்டு கொண்டும் எங்கள் வேலைகளில் மூழ்கிகொண்டு இருந்தோம். ஈழதேசத்தில் புலிகள் இருக்கின்றார்களே நமக்கு ஏன் வம்பு நாம் பாட்டுக்கு நம்ம பொண்டு பிள்ளைகளை படிப்பித்து பணியில் அமர்த்துவோம், நமமட பிள்ளைகள் என்றாவது அப்ப நம்ம தேசம் எது என்று கேட்டால், மேப்பில் காட்டி இது தான் ஒருகாலத்தில் இருந்தது என்று நம்முடைய மலரும் நினைவுகளில் மீண்டிருந்த காலம் , அப்படியோ இருந்து விட்டோம்.

செங்சோலையில் நடந்த கொடுமைகள் கூட எங்கட சனங்களை பாதிக்கவில்லை, சிலர் கண்ணீர்விட்டனர். சிலர் துச்சோ, துச்சோ என்றனர். மகிந்தா நினைத்து கொண்டார், பரதேசம் போனவர்கள் பாராமுகமாகிவிட்டார்கள், இனி பருந்தாய் மாரி தமிழ் புறாக்களை வேட்டையாடலாம் என்று நினைத்து கொண்டார். உதவிக்கும் சோனியா மேடம் பாவம் அவர் ஹிந்தி படஙக்ள் அதிகம் பார்த்து பார்த்து பழிக்கு பழி, ரத்திற்கு ரத்தம் என்ற வசனம் அவருக்கு அதிகம் பிடித்து விட்டது. ஏற்கனவே டில்லியில் உயர் பதவியில் தமிழர்கள் ( தமிழ் இனவுள்ளவர்கள் இருப்பதை பிடிக்காமல்) அவர்களை எப்படி பழிவாங்குவது என்று பார்த்து கொண்டு இருந்த இரண்டு சேரலருக்கு இவர்களை பழிதீர்ப்பதாக நினைத்து ஈழத்தில் வாழும் உறவுகளில் உயிரை வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் அன்னைக்கு போதனை வழங்க , பிராண்வாயு பிரனாப்பும் வெளியுறவு என்றால் மக்களை கொல்லும் நாட்டுடன் நட்புறவு என்ற கொள்கை மட்டுமே என்ற நினைப்பில் தமிழர்களை கொல்ல ஆணையிட்டார்கள்.
ஆனால் புலத்தில் ஒரு தீர்க்க தரிசி தீர்மாணம் போட்டு விட்டார். இனிமேல் ஆயுதம் ஏந்த வேண்டாம், போராட்டம் என்னும் புதிய ஆயுதம் ஏந்துவோம், உலகம் எங்கும் நமது போராட்டத்தை விரிவடைய செய்வோம் என்ற போராட்டம், அதனால் தன்னை சாந்த படுத்தினார். கிளி வந்துச்சு ஆனைவந்துச்சி, புதுகுடியிருப்பு வந்துச்சு என்று அங்கயாலாய்த்தார்கள் சிங்களவனை விட டில்லி வாலாக்கள் தான் அதிகம் சந்தோசமடைந்தார்கள். ஆனால் உண்மை புலத்தில் அமைதியாகும் போராட்டம் உலகமெங்கும் விரிவடைந்துள்ளது. இதுவரை கொடிகண்டிராத சொகுசு வாழ்க்கை வாழ்ந்த எங்கட குட்டி பிள்ளைகள் கொடியேந்திவிட்டன. தாய் பத்தடி இனி குட்டி 16 அடி இதுவரை 10 அடி பாயும் தாயுடன் சண்டையிட்டாய் அதற்கே உனக்கு மூச்சு வாங்கிவிட்டது. இதோ குட்டிகள் கிளம்பிவிட்டன. குட்டி என்றால் சூ என்ற வுடன் ஓடிவிடும் என்று நினைக்கவேண்டாம்.

சிங்கள தேசத்தின் வரைபடத்தை மாற்றும் சூத்திரம் கொண்டவர்கள் நாங்கள் கிளம்பிவிட்டோம், மண்ணில் புதைந்தவன் எங்கே வருவான் என்ற பயத்தில் புதைகுழிக்களை கூட இடித்து பார்த்தாய் அல்லவா நீங்கள் ஈழத்தில் சில ஆயிரம் விதைகுழிகளை இடித்தீர்கள் ஆனால் அந்த விதைகுழியில் இருந்து கிளம்பிய புலிக்குட்டிகள் லட்சக்கணக்கில் உலகெங்கும், எங்களுக்கு விழிப்புனர்வூட்டிய மேற்சொன்ன பெரியவர்களுக்கு நன்றி

முக்கியமான ஒருவருக்கு நாங்கள் தமிழினன் உள்ளவரை நன்றி கூறுவோம் அவர் பயங்கொண்டார் கலைஞர் கருநா(க)நிதி (பயங்கொண்டார் என்ற புனைப்பெயர் புதிதாக இருக்கிறதா இல்லை கங்கை கொண்டான், கடாரம் வெண்றார் என்றதெல்லாம் எங்கள் தலைமுறையினர் அந்நியனை விரட்டி பெற்ற பெயர். ஆனால் தன் இனத்தை காட்டி கொடுத்து விட்டு இன்று ஓட்டு கேட்ட்க எப்படி வெளியில் வருவோம் செறுப்பு எறிவானா, அல்லது காறி உமிழ்வானா என்று பயந்து வீட்டில் இருந்த படியே உடன் பிரப்பே உன்னை கான எனக்கு ஆசைதான் ஆனால் செறுப்பு எறீவிழுமே என்ற பயன் எனக்கு ஆகையால் நீ எனக்கு ஓட்டு போடுவதை மறந்து விடாதே, மதுரைக்கு வருகிரேன். மக்கள் எல்லோரையும் கைகட்டும் டிரைனிங் கொடுக்க அழகிரிக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அனைவரும் கைகட்டிய பிறகு வருகிறேன். என்று பயந்து போய் அறிக்கை விடுவதால் இந்த பெயர் பயங்கொண்டார் சரியான பொருத்தம் தானே சரியான நேரத்தில் தனது குணத்தை வெளிப்படுத்த மூத்த தமிழன தலைவன். உன்னை இத்தனைவருடமாய் நம்பித்தானே நாங்கள் மோசம் போனோம் நாங்கள் தான் சீரழிந்தோம். எங்கள் ஈழமண்ணை உனது வாடை கூட பட விடாமல் காப்போம் இனி எங்கள் கரங்களில் தமீழம் நாங்கள் படைப்போம் தனித்தமிழீழம் , எங்களது அண்ணாக்களின் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்
இது சத்தியம், நிச்சயம்
வெல்க தமிழீழம், வாழ்க தமிழ் ,

காக்கை காரவா கரந்துண்ணும்

மும்பை, சித்திரை.13
வள்ளுவன் குறளில் பல விலங்குகளை உதாரணம் சொல்லி இருக்கிறான், களிரு, தாமரை, அண்ணம், காவரிமான் இன்ன பிற ஆனால் காக்கையை மட்டும் அபூர்வமாக சொல்லி இருக்கிறார்.

காக்கை காரவா கரந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள (527)

உணவை கண்ட உடன் தனது சுற்றத்தாரையும் அழைத்து கொண்டு வந்து உண்ணும் குணமுடையது காக்கை. ஏன் காக்கை உணவை கண்டது தனது உறவை அழைக்கிறது வைப்பது சிறுகரண்டி சோறு அதிலும் அரைமணி நேரம், கா கா என்று காலங்காந்த்தால கூப்பிட்டு துக்கத்தை கெடுக்கிறார்கள். காக்கை சோற்றை எண்ணிப்பார்த்தால் அதிகம் அதிகம் 200 பருக்கைதான் இருக்கும்.
சிறிது நேரத்தில் நமது வீட்டிலும் சோறுவைத்தவன் வீட்டிலும் சுமார் 20 காக்கைக்கு மேல்வந்து விடும். 200 பருக்கை இருக்கும் சிற்றிலை சோற்றை நான் மட்டும் தின்றுவிட்டு கிளம்பிவிடுவோம் என்ற சுய நல மணப்பாண்மை இல்லாமல் எனது உறவுகள், எனக்கு கிடைக்கும் இந்த சிறுபருக்கையிலும் அந்த உறவுகளுக்கு கொடுத்து உண்பேன் என்று கூறி அழைக்கிறதே அந்த உண்னத குணத்துடன் பிறந்த காகம் . இந்த காகத்தின் பெயரை அடிக்கடி உபயோகித்து அதன் மாட்சிமையை கொடுத்து கொள்ளக்கூடாது என்ற உண்ணத நோக்கில் தான் இப்படி சொல்கிறான்.

இன்று நம் தமிழினத்தில் நடப்பது என்ன! ஒரு புறம் சாகிறர்கள், ஒரு புறம் உண்ணாவிரதம், ஒரு புறம் போராட்டம், பல தீக்குளிப்பு , உலக நாடுகள் கண்டிக்கிறது ஆனால் இங்கோ கதை எழுதுகிறார்கள். கவிதை சொல்லுகிறார்கள், தகவல் அனுப்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய என்று கூட கேட்கிறார்கள் . நான் என்ன செய்ய வென்று மூளை சும்மா இருந்தா இன்னேரம் எல்லோரும் கோமாவில் இருப்போம். ஏன் இந்த கண்ணோட்டம் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு வேலை நடந்தாகவேண்டும், வயிறு நிறம்பியாக வேண்டும்.
யார் சாகிறர்கள், கரையானா, எறும்பா, இல்லை புழு பூச்சிகளா, ஒரு எறும்பு செத்தால் ஓராயிரம் எறும்புகள் ஒன்று கூடி தூக்கிசெல்லுமே கவனித்தீர்களா என் உறவுகளே, கரையாண் புற்றை இடித்து பாருங்கள் மறுநாள் உறுதியுடன் மீண்டும் அந்த புற்றை கட்டி தீர்க்கும் அதற்கு மூளை எத்தனை மில்லி கிராம், மைக்ரோ கிராம் கூட கிடையாது. ஆனால் மனிதன் தலை என்னும் உறுப்பில் 90 சதவிதம் மூளை கொண்டவன்.

உலகிலேயே அற்புத பிறவி, அந்த பிறவிகளிலேயே மிகவும் புத்திகூர்மையுள்ளவன் தான் தமிழன். ஒத்து கொள்ள மாட்டான் இந்த கூற்றை! யார்? மராட்டியன் அல்ல, சிங் அல்ல, பாலாஸ்தீனியன் அல்ல , ஏன் சிங்களவனும் அல்ல . தமிழனே ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன் என்றால் எங்கே நான் புத்திசாலி என்று தெரிந்தால் தன்னிடமும் உதவி கேட்டுவந்து நிற்பானோ என்ற பயம், காழ்ப்புணர்ச்சி, சுயநலம். அதிக நாட்கள் பின் செல்ல வேண்டாம்,
கடந்த வருடம் காஸாவில் இஸ்ரேல் குண்டு போட்டான். நானும் பல இஸ்லாமிய குழுமங்களில் உறுப்பினராக இருக்கிறேன். அது இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரியும் , அந்த போர்கால கட்டத்தில் ஈகைக்குறிக்கும் வசனம் இருந்தது எப்படி அங்கு சாகிறார்கள் அவர்களுக்கு உதவுங்கள் என்று சொல்லி இருந்தது. கவிதை இருந்தது இஸ்ரேல் செய்யும் தீங்குதனைஉலகிற்கு எடுத்து
சொல்லும் கண்டிப்புமிருந்தது.

தகவல் இருந்தது இஸ்ரேல் எப்படி பாலாஸ்தீனியர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிடிங்கினான் என்று தகவல் இருந்து, இப்படி அந்த போர் முடியும் வரை தமிழ், அரபி, ஆங்கிலம், உருது, போன்ற யாகூ, மற்றும் கூகிழ் குழுமங்களிலும், வேர்டு பிரஸ், பிளாக்ஸ் போன்ற வலைப்பூக்களிலும் போரை பற்றி இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. எங்கே எந்த இஸ்லாமிய சகோதராவது இதை மறுக்கட்டும். ஏன் !! வலி எங்கோ மனிதம் துடிக்கிறது இங்கே தூக்கம் கேட்டு தவிக்கிறான். வேதனை உள்ளத்தில் கிடந்த வேதனை தான் எழுத்தில் வந்து விழுகிறது
.
எங்கே வேதனை பல்லாயிரம் கிலோ மீட்டர் தாண்டி இந்து, அரபி போன்ற இரு பெரும் சமுத்திரம் தாண்டி இருக்கும் ஒருநாட்டில் சாகிறார்கள் இங்குள்ளவர்கள் வேதனை படுகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காக மட்டும் அல்ல இந்தியாவும் கண்டனம் தெரிவித்து. ஆனால் இங்கே உனது உறவுகள், இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்த உனது பூட்டன் பூட்டியின் வாரிசுகள், உனது வீட்டின் அருகில் சாகிறது, வலியில் ஆழுகிறது, பசியில் துடிக்கிறது.
உனக்கு வடமொழியில் தமிழின் கலப்பு(இலக்கண ஆராய்ச்சியாம்), தமிழின் தொன்மை, சுற்றூலா போவோமே, வாடிப்போன வசந்த காலம் கவிதையாம், நமது இனத்தின் எதிர்காலமே எரிந்து போய் கிடக்கிறது, பக்கத்து வீட்டில் தீப்பற்றினால் அந்த தீ உனது வீட்டில் பிடிக்க கன நேரமாகாது நாம் நம் தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறோம்.

நாளை வரலாற்றை படிப்பார்கள் தமிழில் தான் படிப்பார்கள்,( தமிழ் சாமானியத்தில் சாகாது தமிழன் சாவான், கொல்லுவார்கள் அவனைத்தானே கொல்கிறார்கள் என்று சமாளித்து கொண்டு தமிழ் கவிதை புனைவான், கட்டுரை எழுதுவான்) இதே தமிழில் உங்களது குழந்தைகளில் குழந்தைகள் படிக்கும் 2009-ல் ஆயிரக்கணக்கில் தமிழர்களை குண்டு போட்டு சிங்கள ராணுவம் கொண்றது என்று அப்போது கேட்பான் உங்கள் பேரன் தாத்தா நீங்கள் எல்லாம் என்ன மாங்கா பறித்து கொண்டு இருந்தீரோ இப்படி சாகடித்து கொண்டு இருக்கும் போது என்று கேட்பான் காலம் வரும் நிச்சயம் கேட்பான் ! ! எங்கு வந்து கேட்பன் தெரியுமா

முதியோர் இல்லத்தில் பணம் கட்டினால் சேவை அது கொஞ்சம் லேட்டாக வந்தா யோவ் பெரிசு என்று அதட்டும் காப்பகத்தார் உண்ணை திட்டும் நேரத்தில்
உங்கள் மனம் என் பேரப்பிள்ளைகள் என்னை பார்க்க எப்போது வருவார்கள், எனது மகன் எப்போது இந்த மாத பீஸை கட்டுவான் என்று ஏக்கத்தில் இருக்கும் போது மாத முதல் நாளில் பீஸ் கட்ட வந்த மகனுடம் ஒட்டி கொண்டு வரும் பேரன் கேட்பான்.

என்ன சொல்வீங்கா இல்ல அப்ப நாங்க எழுதி கொண்டு இருந்தோம்,கவிதை எழுதிகொண்டு இருந்தோம் கட்டுரை வரைந்து கொண்டு இருந்தோம், தகவல் வழங்கி கொண்டு இருந்தோம்,கேட்டு
கொள்வான். வீட்டிற்கு செல்வான் மறுமாதம் தனது தந்தை டேய் வாடா தாத்தாவை பார்க்கனும் கொஞ்சநாள் கொட்ட வேண்டி இருக்கு என்று சொல்லும் போது பையன் சொல்லுவான் எந்த தாத்தா எந்த பாட்டி தமிழரை கொத்து கொத்தாக கொல்லும் போது கவிதை புனைந்தாரே அந்த தாத்தாவா அவருக்கு ஏனப்பா!! பல ஆயிரம் பேர் சாவும் போது கவலையில்லாத மனிதருக்கு சேவை செய்து பயன் என்ன எனக்கு மூனில் அஸ்ற்றோ சயின்ஸ்ஸில் இடம் கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் தாத்தாவிற்கு கொடுத்து வீணடிக்க வேண்டாம் என்று சொல்லுவான்,

வரும் நமக்கு இது கண்டிப்பாக வரும். ஒரு எறும்பு தனது உறவு இறந்த உடன் பல தூக்கி கொண்டு மவுன ஊர்வலம் செல்கிறது, ஒரு கரையான் வீடு இடிந்தவுடன் லட்சக்கணக்கான உறவுகள் இனைந்து வீட்டை கட்டுகிறது. நாமோ சாகாட்டும் தூக்கி போடுங்கப்பா, காயமடையட்டும் மருந்து போடுங்கப்பா, பட்டினியால் சாகின்றனர் சோறு போடுங்கப்பா , இப்படி எழுதினால் அவர்களுக்கு பயனுண்டாப்பா என்று கட்டளை இடும் .

சொந்தங்களே மரணித்த உடல்களை அடக்கம் செய்கிறோம், காயமுற்று கிடக்கும் எனது உறவுகளின் காயங்களை மருந்திட்டு ஆற்றுகிறோம், பசியால் வாடும் எனது சொந்தங்களுக்கு உணவு ஊட்டுகிறோம் என்று என்றாவது சொன்னதுண்டா? அதற்கு முயற்சியாவது எடுத்துண்டா, இப்படி யெல்லாம் நடக்கும் என்று சொல்லித்தான் வள்ளுவன் நினைக்கிறான் இவனுக்கு கற்பனை கதைகளை எழுதி வைத்தால் எப்படி நடக்கும் என்று யோசித்து யோசித்தே சொத்து போவான்,

அதனால் அவன் வீட்டில் அருகில் தினமும் வந்து போகும் காகத்தை உதாரணமாக வைத்து சொல்கிறான். அதும் அடிக்கடி சொன்னால் சலித்து போவான் என்று ஒரே ஒரு முறை சொல்கிறான். அவன் ஒரு முறை சொன்னாலும் ஒராயிரம் முறை சொன்னதற்கு சமம். இனிமேல் கவிதை எழுதுங்கள் கட்டுரை எழுதுங்கள் தகவல் சொல்லுங்கள் நமது தலைமுறையாவது ஒற்றுமையாய் வாழட்டும் இருக்கும் வரை நாமும் நமது சொந்தங்களுக்காக வாழ்வோம்.

காக்களைப்பொல் ஒரு பருக்கை கிடைத்தாலும் அதை பங்கிட்டு வாழ்வோம்

சூரியன் இன்று மறையலாம் ஆனால் நாளை மீண்டும் புதிய உற்சாகத்துடன் உதிக்கும், இது இயற்கை தத்துவம், தமிழினமும் அது போல் தான் இன்று பின்னடைவுதான் ஆனால் நாளை புதிய எழுச்சி உண்டு

April 25, 2009

அல்லற்பட் டாற்று அழுதகண்ணீர்

அல்லற்பட் டாற்று அழுதகண்ணீர்
மும்பை,சித்திரை.12

வள்ளுவன் கொடுங்கோல் செய்யும் அரசனைபற்றி இவ்வாறு கூறுகிறார். கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அழுத கண்ணீரே அந்த அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாக மாறிவிடும்.
அல்லற்பட் டாற்று அழுதகண் ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை(555)

நேற்றா இன்றா கடந்த அரை நூற்றாண்டுகளாக சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீது ஏவி விட்ட அடக்கு முறை கொஞ்சமா நஞ்சமா, எத்தனை எத்தனை உயிர்களை இழந்தோம். இழந்த உயிர்களின் உறவுகள் அழுத கண்ணீர் இன்று சிங்களத்தை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு கொண்டு இருக்கிறது.

இலங்கை என்ற நாடு ஒன்று இருந்தது அந்த நாட்டின் பூர்வகுடி தமிழர்கள் வரலாற்று சான்று உண்டு இதற்கு ஆனால் இதில் கொடுமை என்ன வென்றால் நம்மவர்களே இன்று சொல்கிறார்கள் பிழைக்க போன இடத்தில் எதற்கு தனி நாடு கேட்கிறர்கள் என்று.

சுமார் 6-ம் நூற்றாண்டில் பவுத்த மத துறவிகள் இலங்கை சென்ற பிறகு சிங்களம் உருவாகிறது. அங்கு சென்ற பவுத்தர்கள் பேசிய பாலி வட மொழியும், அங்கு ஏற்கனவே வழக்கில் இருந்த தமிழும் இனைந்து கலந்து உருவானதே சிங்கள மொழி இந்த சிங்களம் கூட தமிழ் வார்த்தைதான் இதைத்தான் பாரதியார் “சிங்கள தீவினிற் கோர்” பாலம் அமைப்போம் என்றார். வரலாற்று முடிவுகளை அடுத்து ஆங்கிலேயேர் ஆதிக்கத்தில்

வருகிறது. பலவருடங்களாய் ஆங்கிலேயரின் ஆழுமைக்கு கீழ் இருந்த இலங்கையின் விடுதலைக்கு தமிழனும் சேர்ந்துதான் பாடுபட்டான். சென்றாலும் சென்றான் ஆங்கிலேயன் சிங்களவனின் கைகளில் அதிகாரத்தை தந்துவிட்டு சென்றான்.

அதன் பிறகுதான் தமிழருக்கு கலிகாலம் வந்தது இலங்கையில் இறுதியாக தமிழர்களுக்கு அரசியலில் எந்த அதிகாரமும் கிடையாது என்ற சட்டம் இயற்ற பட்டது.தமிழர்கள் இரண்டாம் குடிகளாக நடத்தபட்டனர், அரசு அலுவலக பணியாலும் சரி சாதரன ஒப்பந்தங்கள் எல்லாம் சிங்களமே முக்கியம் என்றது. பூர்வீக மண்ணுக்கு சொந்தக்காரன் அங்கு அடிமையாக்க பட்டான்.

அகிம்சை படுபாதாளத்தில் வீழ்ந்து மாண்டு போனது இலங்கையில் , இந்த நிலையில் இலங்கை சிறிலங்காவானது , தமிழுக்கு உரிமை மறுக்கபட்டது. இதை எதிர்த்து செல்வா தலைமையில் அகிம்சை முறையில் போராடினார்கள். போராட்டத்திற்கு கிடைத்த பரிசு தமிழின படுகொலை, மகன் கண்ணேதிரே தாய் தங்கை கற்பழிக்க பட்டாள், தாயின் கரங்களில் இருந்து குழந்தை பறித்து சுவற்றி தூக்கி வீசப்பட்டு கொலை செய்யபட்டது. மனைவியை கட்டி போட்டு அவள் கண் எதிரிலேயே கணவனின் கைகால்கள் வெட்டபடுகிறது.

இவை அனைத்தும் ஆட்சியாளர்களின் கண்முன்னே நடந்தது. இந்த கொடுமைகளை கண்டு ரத்தம் ஓட்டம் கொண்ட மிருகங்கள் கூட சீற்றம் கொண்டு கிளர்ந்தெழும் ஆனால் மனிதன் சும்மா இருப்பான எடுத்தான் ஆயுதம் , அதை கண்டது துண்டை கானோம் துணியை கானோம் என ஓடியது சிங்களம். உலகெங்கும் போய் இதோ பயங்காரவாதி என்று முறையிட்டது.

சுரண்டி பிழைக்கும் நாடுகளுக்கு சுரண்ட ஒரு நாடுகிடைத்துவிட்டதே என்ற களிப்பில் அவனுக்கு சாதகமாக நடக்க விளைவு இன்று உலகமே கண்டிராத ஒரு அவலம் நடந்து கொண்டு இருக்கிறது. நூற்றாண்டுகளாக தமிழ்த்தாய் தனது குழந்தைகளின் நிலைகண்டு வடித்த கண்ணீர் சும்மா விடாது. எங்கும் அழுகுரல் சிங்களவன் சிரிக்கிறான். அவனுக்கு சாமரசம் வீசும் இந்தியாவும் சிரிக்கிறது.

எம் பாட்டன் வள்ளுவனின் வாக்கு பொய்த்தாக சரித்திரம் கிடையாது. கொடுங்கோலனின் கையில் பட்டு சிதைந்து உயிர் இழந்து , பெற்றோரை இழந்து அனாதைகளாக அழுது பிரளும் குழந்தைகளின் கண்ணீரின் ஒவ்வொரு சொட்டுக்கும் ஒட்டு மொத்த சிங்களவன் பதில் சொல்லிஆக வேண்டும். மனிதரை கொன்ற மாபாவிகளுக்கு துணை நின்ற அத்தனை ஜென்மங்களும் அல்லல் பட்டு ஓடும் இது சத்தியம் இது நடக்கும்

நாளை சிங்களவனின் மண்ணில், அன்று எங்கள் ஈழம் அமைதி பூவீசும். தமிழ்த்தாய் பட்ட காயங்களுக்கு அவளின் புதல்வர்களும் புதல்விகளும் பூங்கரத்தால் ஒற்றடம் கொடுப்பார்கள். இது நடக்கும் அந்த நாள் தூரமில்லை

April 24, 2009

இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் எங்கள் பிரபாகரன்

புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால் காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள்.முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்பேர் முதுகெலும்பில் காயம்பட்டு கழுத்துக்குக் கீழ் முழுதாக அசைவும்,உணர்வும் இழந்தவர்கள். மீதிப்பேர் இடுப்புக்குக் கீழே செயல்திறன் இழந்தவர்கள். கட்டிலில் உடலும் களத்திலே உணர்வுமாய் படுத்திருந்த அப்பிள்ளைகளின் புன்னகைபோல் பூமியில் வேறு எவரிடத்தும் நான்பார்த்ததில்லை. உணராத உணர்வொன்று ஈர்த்தென்னை ஆட்கொண்டு விழி நீராய் வெளிப்பட்ட இரண்டாவது திருக்கோயிலில் நின்றிருந்தேன். முதற் கோயில் பிரான்சு நாட்டிலுள்ள லூர்து மாதா திருத்தலம்.களமாட முடியாத கவலையின்றி நிரந்தரமாய் படுக்கையிலாகிவிட்ட துயரம் கடுகளவும் அந்தப் பிள்ளைகளுக்கு இருக்கவில்லை. உடல் செயலற்று செத்ததுபோல் ஆனாலும் வெம்பகை முடித்து தமிழீழம் வெல்லும் வேகம் மட்டும் குறையவில்லை. வார்த்தைக்கு வார்த்தை "தமிழீழம் வெல்லும்' என்றார்கள். ""இஞ்செ வாங்கோஃபாதர்'' என்று உரிமையோடு அருகில் அழைத்தார் மதி என்ற போராளி. ""நானும்கேத்தலிக் (ஈஆபஐஞகஒஈ) தான் ஃபாதர். அரியாலை சர்ச், சிஸ்டர் (கன்னியாஸ்திரி) ஆக வேண்டி கான்வென்ட்லெ படிச்சுக் கொண்டிருந்தப்பதான் ஒருத்தருக்கும் சொல்லாத இயக்கத் துக்குப் போனேன். எங்கட நாட்டு நிலையிலெ கான்வென்ட்லெ இருக்கிறதும் புலிகள் இயக்கத்திலெ இருக்கிறதும் ஒன்றுதானே ஃபாதர். கஷ்டப்படாத சனத்துக்காகவும், நீதிக்காகவும் தானே இயேசப்பா சிலுவையிலெ மரிச்சார்? சரிதானே, சொல்லுங்க ஃபாதர்'' என்றார். வரலாற்றில் வந்து போன தேவகுமாரர்களை நமது காலத்திற்கேற்றபடி மீள் கண்டெடுத்தல் செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என கருதியும் எழுதியும் வரும் எனக்கு தனது கடவுளை தமிழீழப் போர்க்களத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய மதி, மிகுந்த மனநிறைவுதந்தார்.அப்போல்லோ மருத்துவமனை உயர் பராமரிப்பு பார்த்திருக்கிறேன். ஸ்ரீ ராமச்சந்திராவில் நானே அனுபவித்திருக்கிறேன். தேர்ந்த மருத்துவர்கள், தூய்மை, சரியான மருந்து, நல் உணவு, நேசம் தோய்ந்த கண் காணிப்பு இவைதான் உயர்தர பராமரிப்பின் வரையறையெனக் கொண்டால் அப் போராளிகள் பராமரிக்கப்பட்டவிதம் அப்போல்லாவைவிட ஸ்ரீராமச்சந்திராவை விட மேல்.உக்கிரபோர் நடக்கும் காலத்தில்கூட வாரம் ஒரு மாலைப்பொழுது இவர்களோடுதான் இருப்பாராம் பிரபாகரன். சாக்லெட் கொண்டு வருவார், அவர்களோடு உணவருந்துவார். களத்தின் கதைகள் பேசிக்கொண்டிருப்பார் என்றார்கள்.இடுப்புக்கு கீழே செயலிழந்து ஆனால் இரு கைகளும் நன்றாயிருந்த போராளிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்றுக்கொடுக்கும் ஏற்பாடுகளை பிரபாகரன் செய்திருந்தார். ஒரு கை இழந்த போராளி ஒருவருக்கு ஜெர்மனியில் எலக்ட்ரானிக்கை விற்கப்படுவதை அறிந்து 46 லட்ச ரூபாய் செலவில் வாங்கிப் பொருத்தியிருக்கிறார்..உடல்வலி தவிர்த்தலும், உயிரைக் காத்தலும் பொதுவாக சராசரி மனித வாழ்வின் முதன்மையான அக்கறைகள். அதற்காகவே நமது முயற்சிகள், போராட்டங்கள்,சமரசங்கள், சரணடைதல்கள், பொய்கள், அடிபணிதல்கள் அனைத்தும் அமைகின்றன.இங்கே ஈழ நிலத்தில் அச்சமில்லா புன்னகையோடு மரணத்தை எதிர்கொண்டு உயிரினை ஈகை செய்ய ஆயிரமாயிரம் இளையர்கள் அணிவகுத்து நிற்பதை எண்ணி காரணங்களும் விடைகளும் தேடிய நாட்கள் உண்டு. தங்களது தமிழ் இனத்தின் நீண்ட துன்பவரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் தமிழ் ஈழக் கனவு மட்டுமே அத் தியாகத்திற்குக் காரணம் என அதுவரை நான் எண்ணியிருந்தேன். ஆனால்பிரபாகரன் என்ற தலைவனின் நேசமும் அதற்குக் காரணம் என்பதை காயமுற்று அசைவின்றிக் கிடந்த இப்போராளிகளின் திருக்கோயிலில் நின்று அறிந்தேன், அகம்நிறைந்தேன்.அப்போது தாரணிஎன்ற போராளி. ""ஃபாதர்... நீங்க சிவசங்கரியின்டெ கடிதம் வானொலியிலெ படிச்சினிங்களே... சிவசங்கரியின்டெ பருத்தித்துறைதான் என்டெ ஊரும். பள்ளிக்கூடத்திலேர்ந்து நேரா இயக்கத்துக்கு ஓடி வந்திட்டேன். மூன்டு மாசத்துக்குப் பிறகுதான் கேட்டு கேட்டு அம்மா வந்து அழுதது. எனக்கும் அன்டு ரா முழுக்க அழுகையாத்தான் இருந்தது. என்னெண்டு செய்ய ஃபாதர்...சிங்கள ஆமிக்காரன் பள்ளிக்குப்போற எங்கட பிள்ளையள தினமும் சோதனையிடுறகாலம் முடியணும். எங்கட தலைவர் காலத்திலேயே முடியணும்''.அரைநாள் அப் பரிசுத்த தேவதைகளின் கதைகள் கேட்டேன். ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினார்கள்.. ஒரு வாரத்திற்குள் புகைப்பட பிரதிகள் அனுப்ப வேண்டு மென்றும் உத்தரவிட்டார்கள். அவர்களுடனான உரையாடலில் அறிந்து உறைந்து போன முக்கியமான உண்மையொன்று என்னவென்றால் அங்கிருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் படுகாயமுற்றது.சிங்களராணுவத்துடனான சண்டைக்களத்தில் அல்ல, சமருக்குத் தங்களையே ஆயத்தம் செய்த பயிற்சி முகாமில் என்ற விபரம். நிஜமாகவே ஆடிப் போனேன். பயிற்சி முகாம் பார்க்க ஆசைப்பட்டேன். அனுமதி கடினம். சாத்தியமில்லை என்றார்கள். அப்போதைய அரசியற்பிரிவு பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் கால்பிடிக்காத குறையாய் கெஞ்சினேன். ஒருவாரகால போராட்டத்திற்குப்பின் பயிற்சிப் பிரிவிற்குப் பொறுப்பான...இரு வாரங்களுக்கு முன் தலைவரைப்பாதுகாத்து வீரமரணமடைந்த கடாஃபி அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தந்தார்.மெய்சிலிர்க்கும் பயிற்சி முகாம் அனுபவத்தை பின்னர் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிரபாகரன் அவர்களுடன் நேர்காணல் எளிதாய் நடந்துவிட பயிற்சி முகாம் பார்க்க ஒருவார போராட்டமென்றால் அதன் முக்கியத்துவத்தைநீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள், காத்திருங்கள்.விடைபெறுமுன்அத்தனை பிள்ளைகளும் சேர்ந்து என்னைக் கேட்டது... ""ஏன் ஃபாதர் இந்தியா எங்கட போராட்டத்தை அழிக்க நினைக்குது? எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் ஃபாதர் இருக்கிறாங்கள்? இந்தியா மனசுவெச்சா எங்களுக்கு கெதியிலெ தமிழ் ஈழம் கிடைக்கும்.'' இன்றும் அவ்வப்போதுஎன்னைப் பிராண்டும் அப்பிள்ளைகளின் கேள்வி : ""எங்கட சனத்தையும் இந்தியாவையும் விட்டா உலகத்துல எங்களுக்கு வேற யார் இருக்கிறார்கள்?'' விடுதலைப்புலிகளின் நுண்கலைப் பிரிவிற்குப் பொறுப்பாளராயிருந்த சேரலாதன்தான் என்னை தன் வாகனத்தில் கூட்டிச் சென்றிருந்தார். "மீண்டும் உங்களை சந்திக்கவருவேன்'' என்று கூறி வணங்கிப் புறப்பட்டேன். அடர்ந்து கனத்த கனவெளிபோல் மனது நிறைந்திருந்தது. எவருக்கும் தெரியாமல் பூத்துச் சிரிக்கும் காட்டுப்பூக்கள் பல்லாயிரமாய் என்னுள் கண்சிமிட்டி மலர்ந்திருந்தன. என்லூர்து மாதா திருத்தலம்போல் இங்கும் நான் கழுவப்பட்டிருந்தேன். சமீபத்தில் கிளிநொச்சி நகர் சிங்கள ராணுவத்திடம் விழுந்தபோது என் நினைவுக்கு வந்து என்னை தவிக்கவிட்டது காயமுற்ற இத்தேவதைகள்தான். ""கடவுளே, மாதாவே இப்பிள்ளைகளை காத்தருள்வீர்'' என்று அதிகாலைவரை ஓரிரவு மன்றாடினேன். நக்கீரன் வாசகர்களே, காட்டுக்குள் இப்பிள்ளைகள் எத்தீங்கும் நேராமல் நல்ல செய்திகள் பிறக்கும் பிறிதொரு நாளுக்காய் உயிர்வாழ வேண்டுமென நீங்களும் உங்கள் விருப்ப தெய்வங்களை மன்றாடுங்கள்.இன்று உணர்வாளர்கள் அனைவரது மனதிலும் எழுகின்ற கேள்வி, ""பிரபாகரன்எங்கிருக்கிறார்?'' இதனை நான் எழுதுகையில் சிங்கள ராணுவம் முல்லைத்தீவில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் நண்பகலுக்குள் 1100 தமிழர்கள் கொல்லப்பட்டு 1700க்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர். பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்.""எனதுசாம்பல்கூட எதிரிகள் கையில் கிடைக்கக் கூடாது'' என தன்னுடன் நிற்கும்தோழர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் பிரபாகரன். எனது நேர்காணலின் போதுமரணத்திற்கு வெகு அருகில் தான் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இயற்கை உங்களை ஏதோ ஒன்றிற்காய் காத்து வருகிறதெனக் கருதலாமா?'' என்று கேட்டேன். ""நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் இருப்பதாக இயற்கை நினைக்கிறது போலும்'' என சிரித்துக்கொண்டே சொன்னார்.மனிததர்மங்கள் முழுவதுமாய் தோற்கிறபோது இயற்கை இறங்கி வரும். காடுகளுக்குள் துன்புறும் அப்பாவி மக்களைப்போல் வேடமிட்டு சிங்கள சிறப்பு அதிரடிப்படைபிரிவுகள் பிரபாகரன் வருகைக்காய் காத்திருப்பதாய் செய்திகள் வருகின்றன. ஈழத்து எல்லைகளின் காவலன் நல்லூர் முருகன் துணையிருப்பான். பிரபாகரன்அவர்கள் சொன்ன இன்னும் பல விஷ யங்கள்...

ஏழைகளின் ராணுவம்

ஏழைகளின் ராணுவம்
சித்திரை, 11
ஏழைகளின் ராணுவம் என்றதும் ஒரு குறிப்பிட்ட மதபிரச்சாரமோ, அல்லது ஏழைகள் சேர்ந்து பாதுகாப்பிற்காக ஏதாவது குழு அமைத்து அதற்கு இந்த பெயர் வைத்தார்களோ என்பது இல்லை.
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு, ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு,
ருசியா, சீனா போன்றவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலில் வந்து கொண்டிருக்கும் ஒரு நாடு. உலகில் ஸ்திரமில்லாத அரசியல் அமைப்பையும், காலத்திற்கு ஒவ்வாத சட்ட அமைப்பையும் கொண்ட ஒரு நாடு.
இந்த நாட்டில் ராணுவம் தான் ஏழைகளின் ராணுவம். ஏழைகளின் ராணுவம் என்றால் ஏழை மக்களுக்காக பாடுபடும் ராணுவம் என்று பொருளல்ல. அப்படி எனில் ஏழைகளின் ராணுவம் என்றால் தனது பணியாளர்களில் ஏழைகளை மட்டும் கொண்டுருக்கும் ஒரு நாடு. ஆதாவது ரணுவ வீரர்களில் 99 சதவிதம் போர் ஏழைகள் மற்றும் அடிதட்டு குடும்பங்களில் இருந்து வந்தார்கள். மற்றும் நடுத்தர வர்க்க அதிகாரிகள்.
அதிர்ச்சியாக இருக்கிறதா இது உண்மை இதை ஒப்புகொள்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரி, இன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் திரிபால் சவுத்திரி முற்காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தங்களிள் மீது போர் தொடுக்கும் அந்நிய படைகளை எதிர் கொள்ள தானே படையின் முன் வந்து கள மிரங்கி போராடுவார்கள் இதற்கு பல உதாரணங்கள் எடுத்துகாட்டாக அலக்ஸாண்டரை எதிர்த்து போரிட்ட புருஷோத்மன். ஆங்கிலேயரை எதிர்த்து நின்று களமாடிய பாளையக்கர வேந்தர்கள் , வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதர்கள் பல உதாரணமாக சொல்லாம். இந்திய 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 1950 வரை பல ராஜ்யங்கள்
ஐக்கிய பாரதத்துடன் இனைக்க பட்டது. இந்த நிலையில் முடியிழந்த பலமன்னர்கள் தங்களின் ராணுவ வீர்களை இந்திய ராணுவ படையுடன் இனைத்தனர். தாங்களும் ராணுவ படையில் உயரதிகாரிகளாக பணியாற்றினர். உதாரணத்திற்கு பட்டியாலா மன்னர் சுக்வீந்தர் சிங் ஜஸ்வால் இந்திய ராணுவத்தில் தனது
400 படைவீரர்களை இனைத்ததுடன் தானும் பிரிகேடியராக பணியாற்றினார்.
சீன போரில் இவரது வீரதீர சாகசங்கள் இன்றும் ராணுவத்தில் அதிகமாக பேசப்படும். இது 1960-கள் வரை தொடர்ந்தது அதன் பிறகு இந்திய அரசியல் வரலாற்றில் பல திருப்பங்கள் வர ஆரம்பித்தது. முன்னாள் குற்றவாளிகளை அரசியல் ஆதாயத்திற்கால சில அரசியல் வாதிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் நேரடியாக அரசியலில் குதிக்க ஆரம்பித்தனர்.
அரசியல் களத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்று உத்தரவாதம் கிடைத்தவுடன் தங்களை மக்களின் பிரதிநிதிகள் என்று காட்டி கொண்டனர். இவர்களின் அரசியல் பிரவேசம் ஜமீன் தார்கள், நிலச்சுவான் தார்கள் போன்றவர்களுக்கு தாங்களின் அதித சொத்துக்களை காப்பாற்ற அரசியல் பதவி ஒன்று இருந்தால் போதும் என்ற நிலை வந்தது. இதனை அடுத்து
நிலச்சுவான் தார்கள் ஜாமின் தார்கள் போன்றோர் அரசியல் களத்தில் தங்களின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக குதிக்க துவங்கினர்.
இந்தியாவில் தற்போது இருக்கும் பல அரசியல் குடும்பங்களை இதற்கு உதாரணமாக காட்ட முடியும். இதனால் பெரும்பணக்காரர்கள் தங்களின் குழந்தைகளை படிக்க வைத்து அயல் நாட்டிற்கு அனுப்பவும் அரசியலில் நுழையவும் , தங்களது அரசியல் பலத்தை கொண்டு நிலங்களை வளைத்து போட்டு வியாபாரம் செய்யவும், மற்றும் சேவை என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் கட்டவும், தொழிற்சாலைகளின் முதாலாளிகள்ஆக்கவும் விழைந்தனர். இன்று மராட்டிய மாநிலத்தில் உள்ள அனைத்து பெரிய தலைகள் எல்லாம் கல்வி நிறுவன தலைவர்கள், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள். எ.கா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி விலாஸ் ராவ் தேஷ் என பட்டியலிடலாம்.
தங்களது குற்றங்களை மறைப்பதற்காக சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக அரசியலுக்கு வருபவர்கள் வட இந்திய மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் தற்போதைய எம்.பி க்கள் வரை கூறலாம். பெரிய அரசியல் கட்சிகள் தங்களின் உறுப்பினர் பலத்தை கூட்டுவதற்காக இது போன்ற குற்றவாளிகளை அரசியலில் சேர்த்து கொண்டு இவர்களுக்கு சட்டத்தின் பிடியில் இருந்து அடைக்கலம் கொடுக்கிறது. தென் மாநிலங்களில் தனது திரைவாழ்வு அஸ்தமிக்கும் போது அரசியல் வாதி என்ற வேடம் போட்டு கொண்டு அரசியலில் புகுந்து திரைவாழ்வில் பெற்ற பிரபலத்தின் மூலமாக ஆட்சிக்கும் வந்து விடுகின்றனர்.
அதன் பிறகு தங்களின் வாரிசுகளை அரசியலில் வரவைத்து கொள்கின்றனர். 1960 வரை ராணுவத்தில் சேர்ந்த முன்னாள் குறுநில மன்னர்கள், ஜமீன் தார்கள், தங்களின் சொத்துக்களை காப்பாற்றவேண்டும் என்ற ஒரே நோக்கோடு அரசியலுக்கு வந்து அரசியலில் குற்றவாளிகளையும் இனைத்துவிடுகின்றனர். இவர்கள் தங்களது வாரிசுகளையும் அரசியலில் இறக்கிவிடுகின்றனர். இவர்களுக்கு அரசியல் சாசனமும் காலத்திற்கு ஒவ்வாத சில சட்ட திட்டங்கள் மூலமாக மெய்க்காப்பாளனாக இருக்கிறது.
1965-ற்கு பிறகு இந்தியா முழுவதும் மந்த மான சூழல் வர ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் அரசு வேலை என்பது தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பானது என்ற மாயை இந்தியா எங்கும் வர ஆரம்பித்து விட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டின் கல்வி அறிவு மிகவும் கீழ்மட்டத்தில் இருந்தது. அரசு பணிகளுக்கு படிப்பு என்ற எல்லைக்கோடு இருந்ததால் படித்தவர்கள் அரசு பதவியில் விரைந்து சேர ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் அதிகம் படிக்க வசதி இல்லாத ஏழைகுடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களின் குறைவான படிப்பை
கொண்டு அரசு பணிகளில் சேர வாய்ப்பில்லாதால் குறைவான கல்வியில் பணி தரும் ராணுவத்தில் சேர ஆரம்பித்தனர்.
இப்படி சேர்ந்தவர்களை தொடர்ந்து அவரை சார்ந்த பலரும் ராணுவத்தில் சேர ஆரம்பித்தனர். இப்படியாக 1995 வரை ராணுவத்தில் சேர்பவர்கள் அனைவரும் ஏழைகளாக இருந்துவிட்டனர். கல்வி கற்றவர்களில் உயர்கல்வி கற்க வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் அனைவரும் ராணுவத்தை நாட ஆரம்பித்து விட்டனர்.
இப்படியாக ஏழைகள் ராணுவ சிப்பாயாகவும் , நடுத்தர வர்க்கத்தினர் அதிகாரிகளாக சுமார் 30 வருடகாலமாய் உலகின் மிகப்பெரிய இந்திய ராணுவத்தை ஏழைகளின் ராணுவமாக மாற்றிவிட்டனர். 2000-ற்கு பிறகு இந்தியா முழுவதும் கணிபொறியுகம் தோன்றியது. கணிப்பொறி கல்வியினால் நல்ல
எதிர்காலம் உண்டு என்று அறிந்த தென் இந்திய இளைஞர்கள் அதிகமாக கணிப்பொறி கல்வியிலும், வட இந்திய இளைஞர் பொருளாதார கல்வியிலும் ஈடுபட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் யார் வேண்டுமானாலும் குறைந்த வாடகையில் இந்தியாவில் கடை போடலாம் என்று(திறந்தபொருளாதார) அரசின் திட்டத்தை அடுத்து பண்ணாண்டு கடைக்காரர்கள் இந்தியாவில் கண்ணில் பட்ட நகரங்களில் எல்லாம் கடைகளை(நிறுவனங்களை) திறக்க ஆரம்பித்தனர். இந்த நிறுவனங்களில் பணிபுரிய அதிக அளவில் இளைஞர்கள் சேர்க்க பட்டனர். தூண்டிலில் தானாக மாட்டும் மீன் போல் பல இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி எலும்பு துண்டுகளாக சம்பளம் கொடுத்து பல இளைஞர்களை தங்களது வலையில் இழுத்து போட்டது.
இதனால் பாதிப்பு முதலில் ராணுவத்திற்கு தான் ஆம் சுமார் 2700 உயரதிகாரிகள் பதவி தற்போது காலியாக உள்ளது. தற்போது ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வது மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலத்தில் எதற்காக வந்தார்களோ அது ஆம் வருமானம் தற்போது இந்தியாவில் இருக்கும் பல தனியார் செக்கியூரிட்டி நிறுவனங்கள் தரும் சம்பளம் கூட அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பல ராணுவ உயரதிகாரிகள் தங்களது பதவியை விட்டுவிட்டு பன்னாட்டு நிறுவனங்களில் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த பெட்ரோலிய நிறுவனத்தின் இந்திய கிளையில் பாதுகாப்பு ஆலோசகராக ஒரு முன்னாள் இந்திய ராணுவ உயரதிகாரி பணியாற்றி வருகிறார்.
அவருக்கு அந்த நிறுவனம் தரும் சம்பளம் மாதம் 1 லட்சத்திற்கு மேல் . இதற்கு மேலும் பல வசதி வாய்ப்புகள். இது முழுவதும் அவர் இந்திய ராணுவத்தில் இருக்கும் போதுகிடைத்தா என்றால் இல்லை என்று தான் சொல்லாம். ஆனால் அயல் நாடுகளில் நிலை வேறு உதாரனத்திற்கு அமேரிக்காவை எடுத்து கொள்ளாலாம் பல பெரிய நிறுவன பணியாளர்கள் தங்களது பணியை துறந்து விட்டு ராணுவத்தில் சேர்கின்றனர். ஏன் என்றால் அவர்களது திறமைகளுக்கு அவர்களின் ஆலோசனைகளுக்கு அந்த நாட்டு ராணுவம் மதிப்பளிக்கிறது.
இதன் காரணமாக பல புதிய யுக்திகள் நவீன ஆயுதங்கள் போன்றவை கண்டு பிடிக்க படுகிறது. அயல் நாட்டு ராணுவத்தில் அதிக அளவில் படித்தவர்கள் சேர்வதற்கு மேல் சொன்ன ஒரு காரணமே போதும். உதாரனம் இங்கிலாந்தின் இளைய இளவரசர் ராணுவத்தில் சேர்ந்து ஆபத்து நிறைந்த ஈரக்
சமர்களத்தில் பணியாற்றியதும், அமைதிப்படையுடன் இனைந்து ஸ்னேகலில் பிரிவினை வாதிகளுடன் போர்புரிந்ததும் இங்கே குறிப்பிடதக்கது.
முன்னாள் அமேரிக்க சனாதிபதி ஜான் கென்னடியின் மகன் அமேரிக்க விமான படை அதிகாரியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது ராணுவத்திலும் ஊழல்களை நுழைத்துவிட்டனர் அரசியல் வாதிகள் உதாரணத்திற்கு போர்பர்ஸ் ஒன்றே போது. இன்னும் சாதீய வேறுபாடுகள் இலைமறை காயாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய ராணுவத்தில் இருப்பதாக ஓய்வு பெற்ற பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது புதிதாக ஒரு பிரச்சனை தோன்றி இருக்கிறது. எல்லா இடங்களிலும் முட்டி மோதி தகுதி இல்லாதவர்கள் என்று சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு சென்றவகளின் புகழிடமாக ராணுவம் மாறிக்கொண்டு வருகிறது.
மெல்ல மெல்ல ஊழல், தகுதியில்லாதவர்கள், சாதீய பிரச்சனைகள், பாதியில் விட்டு செல்லும் அதிகாரிகள், சம்பள பிரச்சனை போன்றவைகளை இந்திய ராணுவம் கருத்தில் கொள்ளாமல் விட்டால் இன்னும் 30 வருடங்களுக்கு தற்போது இருக்கும் வலிமைகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் வரலாற்று புத்தகங்களில் அமைந்து விடும்