August 23, 2008

கனவை நினைவாக்கிய அலக்ஸ் செக்வாசர்














நடை




குழந்தையின் முதல் நடை
குறுநடை,
சிறுமியின் நடை சாரல்,
இளைஞியின் நடை தென்றல்,
வதனியின் நடை வசந்தம்,
காணிகையின் நடையோ காந்தாரம்,
மூதாட்டியின் நடையோ பழந்தமிழ்
நடந்தால் சுகர் தீரும்
வசதியுள்ளோர்க்கு,
நடைபோட்டால் தான் வயிறு நிறையும்
வறியோருக்கு,
நாளை நீ பார்க்க ,நாலுபேர் உனைபார்க்க
நட





இப்படி நடந்த ஒருவர் இன்று தங்கம் பெற்றார்.

நாமும் நடந்தால் நாம் உயர்வோம், நாம் உயர நாடு உயரும்.


அலக்ஸ் சேக்வாசர்


நடையில் தங்கம் சுமார் 14 வருட கனவு. கனவுகளுக்கு கால நேரமேது கனவு கானுங்கள். அதனுடன் முயற்சியும் செய்யுங்கள் காலம் வரும்
போது அது கைகூடும் அதற்கு எடுத்துக்காட்டு இந்த அலக்ஸ் சேக்வாசர்
26 டிசம்பர் 1984 ஆம் வருடம் பிறந்தவர். பள்ளிபருவத்திலே நடைபயிற்சி போட்டிகளின் பல பதக்கம் கண்டவர். ஆனால் உலக அரங்கம்
இவருக்கு அவ்வளவு எளிதில் தங்கம் தரவில்லை.





2005 இவர் தேசிய சாதனையை ஒரு வழியாக முறியடித்தார். ஆனால் சர்வதேச போட்டிகளில் இவரால் வெற்றி கொடி நாட்ட முடியவில்லை
2006 ஆண்டு இவருக்கு ஒரு சோதனையான வருடம் மொராக்கோவில் நடந்த ஒரு மராத்தான் ஓட்ட பந்தயத்தின் போது பாலைவன சூறாவளியால்
வழிதவறி சுமார் 15 நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்க பட்டார்.

அப்பொழுது அவர் கூறியது நான் தற்கொலை செய்ய பார்த்தேன். ஆனால் எனது உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மெதுவாகிவிட்டதால் எனது மணிக்கட்டில் இருந்து இரத்தம் வழிய வில்லை.

அப்போழுது நான் நினைத்து கொண்டேன். மரணத்தின் வாயிலிருந்து என்னை காத்த இறைவன். என்னை சாதனையாளனாக பார்க்க விட்டு
வைத்தார் என்று நினைத்து கொண்டு இத்தாலி திரும்பியதும் தனது முன்னாள் தவறுகள் எல்லாம் என்ன வென்று நன்றாக ஆராய்ந்தார்.
பிறகு பீஜிங்கில் தங்கம் என்ற கனவுகளோடு நடக்க துவங்கினார்.
அவரது ஒவ்வொரு அடியும் பீஜிங் தங்க கனவாக இருந்தது. வாழ்க்கையின் எல்லைக்கு ஓடவில்லை ஆனால் 2008 ல் தங்கம் என்ற ஒரு
கனவில் நடந்தார்.


இதில் அவருக்கு ஒசாகா பந்தயம் ஒரு திருப்பமாக அமைந்தது. ஆம் அங்கு இவர் நன்றாக நடந்தும் மூன்றாம் இடம் தான் பெறமுடிந்தது.
இங்கு இவர் முதலிடம் வந்திருந்தால் "ஒருவேளை எனக்கு பீஜிங்கில் தங்கம் கிடைத்திருக்குமோ என்னவோ சந்தேகம் தான் என்றார்"
அங்கு தங்கம் வெண்றவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.
அவரிடமே பல அறிவுறைகள் வாங்கினார். ஆனால் காலத்தின் கோலம் இரண்டுபேருமே ஒரே நடை பந்தயத்தில் நடந்தார்கள். தனது இத்தனை
வருட கனவுகள் நினைவாக்க நடந்தார். 3:37:09 மனித்துளிகளின் 50 கிலோ மீட்டர் கடந்து சாதாரனமாக தங்கம் வாங்கவில்லை
ஆம் உலக சாதனை என்ற பெயருடன் தங்கம் வாங்கினார். தங்கம் வாங்கிய உடன் இவர் சொன்னது.

எனக்கு பல நேரங்களில் நடைஓட்ட பந்தயத்தில் என்ன என்ன தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிந்து விட்டது. நான் இத்தாலி சென்று எனக்கு ஏற்பட்ட இந்த பாடத்தை பிறருக்கு கற்று கொடுத்த வரும் காலங்களில் இத்தாலியை நடை ஓட்ட உலக சம்பியன்கள் வாழும் நாடாக மாற்றுவேன் என்றார்.

இதில் நமக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும் ஆம் ரோமாபுரிக்கு சுண்டல் விற்றவர்கள் அல்லவா நாங்கள் ??
(மசாலா பொருட்கள்)

No comments: